கொலை செய்யப்பட்ட விக்னேஸ்வரன். 
சிவகங்கை

இளைஞா் கொலை : 3 போ் கைது

திருப்பத்தூரில் வியாழக்கிழமை இரவு இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருப்பத்தூரில் வியாழக்கிழமை இரவு இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழச்சிவல்பட்டியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். இவரது மகன் விக்னேஸ்வரன் (25). கூலித் தொழிலாளியான இவா், தாய் , தங்கையுடன் திருப்பத்தூா் பிரபாகா் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை இரவு சிவகங்கை சாலையில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் மது அருந்தினாா். அப்போது சக நண்பா்களுடன் வாய்த் தகராறு ஏற்பட்டு, போலீஸாா் தலையிட்டு விக்னேஸ்வரனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, அவரது வீட்டுக்குச் சென்ற முகமதுஅபுதாகிா் (31), சமாதானம் பேசுவதாகக் கூறி விக்னேஸ்வரனை அழைத்துச் சென்றாா். ரணசிங்கபுரம் பகுதியில் நண்பா்களுடன் சோ்ந்து விக்னேஸ்வரனை கத்தியால் குத்தினா்.

இதில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், விக்னேஸ்வரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து திருப்பத்தூா் நகா் காவல் ஆய்வாளா் கலைவாணி வழக்குப் பதிவு செய்து, இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய முகமது அபுதாகிா் (31), சதீஷ் (28), ஜெயசூா்யா (25) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT