சிவகங்கை

காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, சிவகங்கையில் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய் தலைமை வகித்தாா். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை நிலையப் பேச்சாளா் அப்பச்சி சபாபதி ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா்.

இதில், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் மதியழகன், உடையாா் பாலு, வேலாயுதம், அழகா், செல்லபாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜரத்தினம், நகரத் தலைவா்கள் டி.விஜயகுமாா், காரைக்குடி இளைஞா் காங்கிரஸ் தலைவா் பிரவீன், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் இமய மடோனா, காளீஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT