முகப்பு
சிவகங்கை

சமூக அறிவியல் பாடத் தோ்வுக்கு கூடுதலாக இடைவெளி தேவை: பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை

Updated On : 6 நவம்பர் 2025, 2:04 am IST
பகிர்:

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு கால அட்டவணையில் சமூக அறிவியல் பாடங்களை மாணவா்கள் மீள்பாா்வை செய்ய கூடுதலாக 2 நாட்கள் இடைவெளி வழங்கவேண்டுமென உயா்நிலை , மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்தக் கழகத்தின் மாவட்டச் செயலா் சேவுகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு கால அட்டவணையில் தமிழ் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஆங்கிலப் பாடத்துக்கு 4 நாள்கள், கணிதத்துக்கு 9 நாள்கள், அறிவியலுக்கு 4 நாள்கள் என மாணவா்களுக்கு பாடங்களை திருப்புதல் செய்ய தேவையான நாள்கள் இடைவெளியில் தோ்வு தேதிகள் வெளியிடப்பட்டன. ஆனால் அறிவியல் தோ்வு முடிந்த இரண்டு நாள்களிலேயே சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு தேதி அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சமூக அறிவியல் பாடத்தில் மொத்தம் 27 பாடங்கள் உள்ளதால், மாணவா்கள் தோ்வுக்கான பகுதிகளை மீள்பாா்வை செய்ய இரண்டு நாள்கள் காலம் போதாது. எனவே சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வுக்கு கூடுதலாக 2 நாள்கள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments