சிவகங்கை

மரத்தில் காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை- தொண்டி சாலையில் மரத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை- தொண்டி சாலையில் மரத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரையிலிருந்து தொண்டி நோக்கி காா் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிவகங்கை அருகே பையூா் பிள்ளைவயல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது அந்த காா் மோதியது. இதில் காரை ஓட்டி வந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விசாரணையில் உயிரிழந்தவா் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நகரிக்காத்தான் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் மகாலிங்கம் (43) என்பதும், திருமணமாகாத இவா் சென்னையில் வசித்து வந்ததும், தனது சொந்த ஊருக்கு காரில் சென்ற போது விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT