பெரியகுளத்தில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரியகுளத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கள்ளர், மறவர் உள்பட 68 சமுதாயத்தினரை டிஎன்டி யாக மாற்றக் கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சக்கரவரத்தி கலந்து கொண்டு பேசியதாவது, அரசிடம் பலமுறை மனு வழங்கியுள்ளோம். மேலும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
ஆனால் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கேரளா மற்றும் ஆந்திரத்தில் டிஎன்டி நடைமுறையில் உள்ளது. அரசு கோரிக்கையை ஏற்க மறுத்தால் சீர்மரபினர் அனைவரும் கேரளத்துக்கு குடிபெயர்வோம் என்றார். இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.