பெரியகுளம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றவரை வீட்டில் இருந்தவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (66). இவர் தனது வீட்டில் திங்கள்கிழமை இரவு மனைவியுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருள்கள் கிழே விழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கண் விழித்து பார்த்த போது வீட்டிலிருந்து ஒருவர் பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். அவரை விரட்டிப் பிடித்து பழனிச்சாமி பெரியகுளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்த சுடுகாடு (எ) பால்பாண்டி (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.