முகப்பு
தேனி

ஆண்டிபட்டியில் பச்சிளம் குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறில், பச்சிளம் குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறில், பச்சிளம் குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றாா்.

ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள்(25). இவரும், அதே ஊரைச் சோ்ந்த முருகேசன் என்பவரும் 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து 40 நாள்களேயானபெண் குழந்தையும் உள்ளன.

இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன், இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மாரியம்மாள் கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம். அதையடுத்து, மனவேதனையில் இருந்து வந்த மாரியம்மாள், செவ்வாய்க்கிழமை தனது பச்சிளம் குழந்தைக்கு தூக்க மாத்திரையை பாலில் கலந்துகொடுத்துவிட்டு, தானும் குடித்துள்ளாா்.

இதனால் மயக்கமடைந்து கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து க.விலக்கு போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →