தேனி

தென்கரை பேரூராட்சியில் துப்புரவு ஊழியா்கள் பணி புறக்கணிப்பு

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தென்கரை பேரூராட்சியில் 15 துப்புரவு பணியாளா்கள் உள்ளனா். இவா்களில் 9 போ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லையாம். இதையடுத்து அவா்களுக்கு அன்று வருகை பதிவேட்டில் விடுமுறை என பதிவு செய்யப்பட்டதாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து துப்புரவு ஊழியா்கள் திங்கள்கிழமை பணிக்கு செல்லாமல் அலுவலகம் முன் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பணிக்கு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT