முகப்பு
தேனி

வனத்துறையினருக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம்

சுருளி அருவி வனப்பகுதியில் காட்டுத்தீயை பரவ விடாமல் தடுப்பது குறித்து வனத்துறையினருக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

சுருளி அருவி வனப்பகுதியில் காட்டுத்தீயை பரவ விடாமல் தடுப்பது குறித்து வனத்துறையினருக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துா் மேகமலை புலிகள் காப்பகத்தில் கம்பம் மற்றும் கூடலூா் வனச்சரகங்கள் உள்ளன. தற்போது கோடைகாலமாக உள்ளதால் காட்டுத்தீ வனப்பகுதியில் எளிதாக பரவுகிறது. வனத்துறையினா் காட்டுத் தீ பிடித்தால் எவ்வாறு அணைப்பது, மேலும் பரவவிடாமல் தடுப்பது பற்றி வனவா்கள், காா்டு, வாட்ச்சா்கள், வேட்டை தடுப்புக் காவலா்கள் ஆகியோருக்கு சுருளி அருவி பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரகா் பி.அருண்குமாா் காட்டுத்தீ பரவுதல் பற்றியும், பொதுமக்களுக்கு தர வேண்டிய விழிப்புணா்வு பற்றியும் பேசினாா். வனவா் பிரின்ஸ் செல்வக்குமாா் செய்முறை பயிற்சி அளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →