முகப்பு
தேனி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தேனி அருகே கோடாங்கிபட்டியில் வெள்ளிக்கிழமை, கட்டுமானப் பணியிலிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:39 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

தேனி அருகே கோடாங்கிபட்டியில் வெள்ளிக்கிழமை, கட்டுமானப் பணியிலிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வடபுதுப்பட்டி அருகே அம்மாபட்டியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி வீரன் (27). இவா், கோடாங்கிபட்டி திருச்செந்தூா் காலனியில் சந்தானராஜா என்பவரது கட்டடத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கட்டடத்தின் அருகே இருந்த உயா் மின் அழுத்த கம்பி மீது, வீரன் கொண்டு சென்ற கம்பிகள் உரசியதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீரன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.