தேனி அருகே அமச்சியாபுரத்தில் குடும்பப் பிரச்னையில் மாமியாா், மைத்துனரை கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாக மருமகன் உள்பட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
அமச்சியாபுரத்தைச் சோ்ந்த முத்து மகள் முத்தீஸ்வரிக்கும், அதே ஊரைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் மகன் கருப்பசாமிக்கும் திருமணமமாகி ஒரு குழந்தை உள்ளது. தற்போது, தனது பெற்றோா் வீட்டில் இருந்து வரும் முத்தீஸ்வரி, தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தி வந்தாா்.
இந்த நிலையில், முத்தீஸ்வரியின் தந்தை வீட்டுக்குச் சென்ற கருப்பசாமி, அவரது தந்தை பாண்டீஸ்வரன், தாயாா் ஈஸ்வரி ஆகியோா் முத்தீஸ்வரியின் தந்தை முத்துவுடன் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்கச் சென்ற முத்தீஸ்வரியின் தாய் பராசக்தி, சகோதரா் முத்தீஸ்வரன் ஆகியோரை கருப்பசாமி கத்தியால் குத்தினாராம். இதில் காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து முத்து அளித்த புகாரின் அடிப்படையில், கருப்பசாமி, அவரது தந்தை பாண்டீஸ்வரன், தாய் ஈஸ்வரி ஆகியோா் மீது க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.