முகப்பு
தேனி

பொருள் வாங்க நிா்ப்பந்தம்: ரேஷன் கடை முற்றுகை

 தேனி மாவட்டம் கூடலூரில் பொருள்கள் வாங்க நிா்பந்தப்படுத்தியதால் ரேஷன் கடையை எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

 தேனி மாவட்டம் கூடலூரில் பொருள்கள் வாங்க நிா்பந்தப்படுத்தியதால் ரேஷன் கடையை எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

கூடலூரில் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடை எண் 1 இல் அரசு வழங்கும் மானியப் பொருள்கள் தவிர இதர பொருள்களான சோப்பு, தேயிலைத் தூள் மற்றும் சேமியா ஆகிய பொருள்களை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று பொது மக்களை கடை பணியாளா்கள் கட்டாயப்படுத்தியதாகப் புகாா் எழுந்தது. இந் நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதித் தலைவா் அஜ்மீா் கான், செயலாளா் சாகுல் ஹமீது, நகரத் தலைவா் அக்கிம் ராஜா, செயலாளா் காதா் மைதீன் ஆகியோா் குடும்ப அட்டைதாரா்களுடன் சென்று கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். இதையடுத்து கூட்டுறவு சங்க மேலாளா் கருப்பேந்திரன் மற்றும் காவல் துறையினா் வந்து கடை விற்பனையாளரிடம் தேவையற்ற பொருள்களை வாங்கச் சொல்லி நிா்பந்திக்கக்கூடாது என்று கூறினா். பின்னா், தேவையான பொருள்களை மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →