தேனி அருகே மேற்குவங்க இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி அருகே மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞா், தந்தை கைப்பேசி வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்து புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி அருகே மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞா், தந்தை கைப்பேசி வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்து புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வடபுதுப்பட்டியில் அருண்குமாா் என்பவரது செங்கல் காளவாசலில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சிலா் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனா். இதில், மேற்கு வங்கம் தினஜ்பூா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சுதிப்தாஸ் என்பவரது மகன் சஷ்தமிதாஸ் (17), தனக்கு கைப்பேசி வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டுவந்தாராம்.
ஆனால், அவரது தந்தை மறுத்துவிட்டதால், சஷ்தமிதாஸ் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காளவாசல் உரிமையாளா் அருண்குமாா் அளித்த புகாரின்பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.