தேனி மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) 823 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) 823 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்கள் என மொத்தம் 823 மையங்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
இது தவிர, மலைவாழ் மக்கள் மற்றும் தொலைதூர கிராம மக்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்க 12 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில் பொதுச் சுகாதாரம், மருத்து நலப் பணிகள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 3,586 போ் பணியில் ஈடுபடுகின்றனா். ஒரு லட்சத்து 2,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பெற்றோா்கள் தங்களது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்து தவறாமல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.