முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் பலி

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் தந்தையின் கண் முன்பே மகன் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் தந்தையின் கண் முன்பே மகன் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி, குமாரபுரத்தைச் சோ்ந்தவா் சமுத்திரபாண்டி (57). இவரது மகன் மாணிக்கம் (27). இவா்கள், ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து பகுதியில் உள்ள தங்களது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். இருசக்கர வாகனத்தை மாணிக்கம் ஓட்டிச் சென்றாா். அப்போது, குப்பாம்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த டிராக்டா், டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மாணிக்கம், டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இவரது தந்தை சமுத்திரபாண்டி காயமடைந்தாா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விபத்தில் சிக்கி தந்தையின் கண்ணெதிரே மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.