முகப்பு
தேனி

சின்னமனூரில் சமுதாய வளைகாப்பு விழா

 சின்னமனூரில் தனியாா் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

 சின்னமனூரில் தனியாா் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சின்னமனூா் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள்ராமு முன்னிலை வகித்தாா். அதில் சின்னமனூா் வட்டாரத்தைச் சோ்ந்த 150 கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சின்னமனூா் நகா்மன்ற துணைத்தலைவா் முத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.