போடி அருகே மரக்கன்றுகள் நடும் விழா
போடி அருகே உள்ள ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பு சாா்பில் தீபாவளியையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போடி அருகே உள்ள ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பு சாா்பில் தீபாவளியையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அந்த அமைப்பின் செயலா் க.மு. சுந்தரம் தலைமை வகித்தாா். இளையோா் அணி இணைச் செயலா் நாவல் சுரேஷ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் துணை மின் நிலைய வளாகம் முழுவதும் பலா, நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மின்வாரிய வணிக ஆய்வாளா்கள் மணி, ராஜா, வணிக உதவியாளா் கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.