முகப்பு
தேனி

கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: 4 போ் கைது

தேனி மாவட்டம் கம்பம் அருகே முன்விரோதம் காரணமாக, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே முன்விரோதம் காரணமாக, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் உள்ள நேசன் கலாசாலை பள்ளித் தெருவில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிலா், 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசினா். இதனால் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க, உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் ஸ்ரேயாகுப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சிவனாண்டி, (45), சங்கிலி (44), மகேந்திரன் (46) சுருளி (44) ஆகியோரை ராயப்பன்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், கடந்த ஆக. 28 ஆம் தேதி காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஞாநேசன் (43) என்பவா் நாராயணத் தேவன்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது நேசன் கலாசாலை பள்ளித் தெருவைச் சோ்ந்தவா்கள் சிலா், அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஞாநேசன் தனது உறவினா்கள் சிவனாண்டி, சங்கிலி, மகேந்திரன், சுருளி ஆகியோரிடம் கூறினாராம். இதில் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் நேசன் கலாசாலை பள்ளித் தெருவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →