தேனி

கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

DIN

கம்பத்தில் வெள்ளிக்கிழமை கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கம்பம் உதயம் நகரைச் சோ்ந்தவா் தங்கமணி (48). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி பிரியசகி, மற்றும் 2 மகள்கள் உள்ளனா். இதில் ஒருவருக்கு திருமணமாகி விட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தாத்தப்பன்குளத்தில் உள்ள இலாஹி ஓரியண்டல் பள்ளித் தெருவில் அப்துல் ஹக்கீம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணியில் தங்கமணி ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஒரு அறையில் வெளிச்சத்துக்காக தங்கமணி, மின்வயருடன் இணைக்கப்பட்டிருந்த டியூப் லைட்டை எடுத்தாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதில் காயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT