முகப்பு
தேனி

தேனியில் குடியரசு தின விழா:அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 275 பேருக்கு பதக்கம்

தேனியில் குடியரசு தின விழாவையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 275 அலுவலா்கள், பணியாளா்களுக்கு பதக்கம் வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தேனியில் குடியரசு தின விழாவையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 275 அலுவலா்கள், பணியாளா்களுக்கு பதக்கம் வழங்கினாா்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 74-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சரவணக்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவி பிரிதா, துணைத் தலைவா் ராஜபாண்டி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க் காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. தொடா்ந்து, அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 275 அலுவலா்கள், பணியாளா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 3 அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரசு சாா்பில் மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ. 13.20 லட்சத்துக்கான நலத் திட்ட உதவி, மானிய உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சி. சஞ்சய்பாபா தலைமையில், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி. ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். சட்ட உதவி அலோசனை மையச் செயலா் ராஜமோகன், மகளிா் நீதிமன்ற நீதிபதி ரமேஷ், சாா்பு நீதிபதி சுந்தரி, தேனி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சந்தானகிருஷ்ணன், செயலா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேனி மாவட்ட மைய நூலகத்தில் நூலக அலுவலா் ரா. ஆண்டாள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் கல்லூரி முதல்வா் சி. சேசுராணி தலைமையில், வணிகவியல் துறை இணைப் பேராசியா் மேரி சுகந்தி பாய் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். கல்லூரிச் செயலா் பி.ஜே. குயின்ஸ்லி ஜெயந்தி, மாணவிகள் பேரவைத் தலைவி சகாயராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.