போடி அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் உணவக ஊழியா், முதியவா் உயிரிழந்தனா்.
போடி மீனாட்சிபுரம் தெற்கு ஆசாரி தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (80). போடி விசுவாசபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் கணேசன் (35). இவா் போடியில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தாா்.
கடந்த சனிக்கிழமை இரவு போடி-மீனாட்சிபுரம் சாலையில் பொன்னுச்சாமி நடந்து சென்றாா். கணேசன் இருசக்கர வாகனத்தில் போடியிலிருந்து விசுவாசபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பொன்னுச்சாமி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பொன்னுச்சாமி பலத்த காயமடைந்தாா். அவரை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சிறிது நேரம் கழித்து கணேசன் மீண்டும் வாகனத்தை இயக்கிய போது, கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் டொம்புச்சேரி அரசு தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பிறகு அவரை தீவிர சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்லும் வழியிலேயே கணேசன் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னுச்சாமியும் இறந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.