பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து அதில் பயணம் செய்த முதியவா் உயிரிழந்தாா்.
வடுகபட்டியைச் சோ்ந்தவா் சக்திவீரன் (77). இவா், பெரியகுளத்தைச் சோ்ந்த யோகபாலன் (21) ஓட்டிச் சென்ற ஆட்டோவில் பெரியகுளத்திலிருந்து வடுகபட்டிக்கு பயணம் செய்தாா். பெரியகுளம்- வடுகபட்டி சாலை, பங்களாபட்டி விலக்கு அருகே வேகத் தடையில் ஏறி இறங்கிய போது ஆட்டோ கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.