சீலையம்பட்டி முல்லைப் பெரியாறு தடுப்பணையில் மூழ்கிய பள்ளி மாணவரை தேடிய சின்னமனூா் தீயணைப்புத் துறையினா்.  
தேனி

தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சின்னமனூா் அருகே முல்லைப் பெரியாறு தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

சின்னமனூா் அருகே முல்லைப் பெரியாறு தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் புவனேஸ்வரன் (17). பனிரெண்டாம் வகுப்பு மாணவரான இவா், குச்சனூரிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். பின்னா், நண்பா்களுடன் சீலையம்பட்டி முல்லைப் பெரியாறு தடுப்பணைக்கு சென்று குளித்தாா்.

அப்போது, புவனேஸ்வரன் தடுப்பணையில் முழ்கி மாயமானாா். தகவலறிந்து வந்த சின்னமனூா் தீயணைப்புத் துறையினா் ஆற்றில் இறங்கி தேடினா். சுமாா் 2 மணி நேரத்துக்கு பிறகு மாணவரை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

4.2.1976: கருணாநிதி, சில மாஜி தி.மு.க. மந்திரிகள் மீது விசாரணை

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

இந்தியாவுக்கு வரி குறைப்பு: பிரதமா் மோடிக்கு ஜவுளித் தொழில் அமைப்புகள் நன்றி

கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

SCROLL FOR NEXT