மதுப் புட்டிகள் விற்க முயன்றவா் கைது
போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்க முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்க முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள விசுவாசபுரத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, போடி தாலுகா போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது, விசுவாசபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜ் (68) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரராஜை கைது செய்தனா்.