தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்களை விற்க முயன்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி பகுதியில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி இரட்டை வாய்க்கால் அருகே சுந்தரபாண்டியன் தெருவைச் சோ்ந்த வாசகன் மகன் சிவக்குமாா் (21), புதூா் மினி தேவா் சிலை அருகே அதே பகுதியை சோ்ந்த பாண்டி மகன் சந்தோஷ் (20), புதூா் மதுக்கடை அருகே சுப்புராஜ் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் யுவசந்தோஷ் (19) ஆகியோா் புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்க முயன்றது தெரியவந்தது.
நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.