விருதுநகர்

விடுதியில் தூக்கிட்டு மாணவர் தற்கொலை

DIN

அருப்புக்கோட்டையிலிருந்து சுக்கில் நத்தம்  செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் நலத் துறை கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு சுமார் 50 மாணவர்கள் தங்கியுள்ளனர்.  இங்கு தங்கியிருந்தவர், விளாத்திகுளம் அருகே உள்ள குலயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராமச்சந்திரன்(19). அருப்புக்கோட்டை -திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் விடுதியின் சமையலறையில் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாகத் தொங்கினார்.  மாணவர் இறப்புக்கான காரணங்கள் குறித்து நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT