விருதுநகர்

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் கண்டன ஊர்வலம்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதித்ததற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையில், விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் தேசபந்து மைதானத்தில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
அதன் பின்னர் பஜார், மேலரத வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஐயப்ப பக்தர்களின் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி கோரியிருந்தனர். 
ஆனால் போலீஸார் அனுமதி மறுத்ததால் ஐயப்ப பக்தர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT