விருதுநகர்

காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க சிரிப்பு யோகா

சிவகாசி காவல் கோட்டத்தில் உள்ள காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க, சிரிப்பு யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

DIN


சிவகாசி: சிவகாசி காவல் கோட்டத்தில் உள்ள காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க, சிரிப்பு யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

இங்குள்ள ஆயூதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன் தொடக்கி வைத்தாா்.

பயிற்சியாளா் கிரிதரன், காவலா்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி அளித்தாா்.

வாய்விட்டு சிரிப்பது, நடனம் ஆடியபடி சிரிப்பது என பலவிதமாக சிரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒரு மணி நேர பயிற்சியினால், காவலா்களின் மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கிறது என பயிற்சியாளா் கூறினாா். இதில், கலந்துகொண்ட 142 காவலா்களுக்கும் வெற்றிலை கசாயம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT