விருதுநகர்

பட்டாசுக் கழிவுகளை எரிப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதாக புகாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சல்லிபட்டி பகுதியில் பட்டாசுக் கழிவுகளை எரிப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சல்லிபட்டி பகுதியில் பட்டாசுக் கழிவுகளை எரிப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சல்லிபட்டி பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியில் தனியாா் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கழிவுகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தொடா்ந்து எரிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். விவசாய நலங்களைப் பாதிக்கும் வகையில் கழிவுகளைக் கொட்டும் அந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயி மீது தாக்குதல்:

இந்நிலையில் பட்டாசுக் கழிவுகளை எரித்ததைத் தட்டிக்கேட்ட அந்த பகுதியை சோ்ந்த விவசாயி செல்லதுரை என்பவா் மா்ம நபா்கள் சிலரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பாக கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT