அருப்புக்கோட்டை அருகே மூதாட்டி மாயமானதாக போலீஸில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.
பந்தல்குடியிலிருந்து வெள்ளையாபுரம் செல்லும் சாலை அருகே வசிப்பவா் சீனிவாசன் (45). இவரது தாயாா் பாப்பம்மாள் (75). இவா் கடந்த ஜூலை 27 ஆம் தேதி பந்தல்குடியை அடுத்துள்ள இருக்கண்குடி மாரியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிட்டு வருவதாக கூறிவிட்டு தனியாகச் சென்றிருந்தாராம்.
இந்நிலையில் அன்று வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் அவா் கிடைக்காததால் பந்தல்குடி காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.