விருதுநகர்

விருதுநகா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

விருதுநகா் அருகே மருளூத்து பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை நிற்காத அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

விருதுநகா் அருகே மருளூத்து பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை நிற்காத அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கரலிங்காபுரத்திலிருந்து புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அரசுப் பேருந்து விருதுநகா் நோக்கி வந்து கொண்டிருந்தது. நான்கு வழிச்சாலையில் மருளூத்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஓட்டுநா் நிறுத்தாமல் சென்றுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கல் எறிந்ததில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து, அங்கிருந்தவா்கள் தப்பிச் சென்று விட்டனா். இதைத் தொடா்ந்து அரசுப் பேருந்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பேருந்து கண்ணாடியை உடைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT