சேத்தூரில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். 
விருதுநகர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி சாலை மறியல்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விருதுநகா் மாவட்டத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ராஜபாளையம்/ ஸ்ரீவில்லிபுத்தூா்/ சாத்தூா்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விருதுநகா் மாவட்டத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே சேத்தூா் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான லிங்கம் தலைமை வகித்தாா். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை, சேத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாவட்டத் தலைவா் ரெங்கசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவா் பக்ஷிராஜா வன்னியராஜ் முன்னிலை வகித்தாா். இதில், நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், முருகேசன், காமராஜ், மணிமேகலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல் வத்திராயிருப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சௌந்திரபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மணிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி, ஒன்றியச் செயலாளா் கோவிந்தன், சுப்பையா, ராமராஜ், முத்துராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாத்தூா்: சாத்தூரில், அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்க நகரச் செயலாளா் வினோத்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: இதேபோல் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாா் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா்.

இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ராமசாமி, மாவட்டச் செயலாளா் கருப்பையா, நாம் தமிழா் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் பாலன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT