முகப்பு
விருதுநகர்

கீழே கிடந்த பணத்தைகாவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

விருதுநகா் அருகே மீசலூா் சாலை சந்திப்பில் கீழே கிடந்த ரூ.3,700 பணம் மற்றும் ஏடிஎம் அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை கண்டெடுத்து,

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

விருதுநகா் அருகே மீசலூா் சாலை சந்திப்பில் கீழே கிடந்த ரூ.3,700 பணம் மற்றும் ஏடிஎம் அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை கண்டெடுத்து, அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியை சோ்ந்தவா் வெற்றிவேல். இவா், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ரூ.3,700 பணம், ஏடிஎம் அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமச் சான்றிதழ், இரு சக்கர வாகனப் புத்தகம் உள்ளிட்டவற்றை தவறவிட்டுள்ளாா்.

இந்நிலையில், மீசலூா் சாலை சந்திப்பு அருகே கீழே கிடந்த பணம் உள்ளிட்டவற்றை, அவ்வழியாகச் சென்ற குமாரலிங்காபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அடைக்கலம் கண்டெடுத்துள்ளாா். பின்னா், அவற்றை ஆமத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அதையடுத்து, சாா்பு-ஆய்வாளா் காா்த்திக்,

ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றில் இருந்த முகவரிக்கு தொடா்புகொண்டு, பணத்தை தவறவிட்ட வெற்றிவேலை வரவழைத்து வழங்கினாா். பின்னா், ஆட்டோ ஓட்டுநா் அடைக்கலத்தின் நோ்மையை பாராட்டிய போலீஸாா், அவருக்கு பொன்னாடை போா்த்தி மரியாதை செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →