விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே தினமான ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்.
அவரது அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள், தொழிலாளா் தினமான மே 1 ஆம் தேதியன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், மதுபானக் கூடங்களின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.