முகப்பு
விருதுநகர்

மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் வியாழக்கிழமை 2 பவுன்  தங்கச் சங்கிலி திருட்டுப்போனது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் வியாழக்கிழமை 2 பவுன்  தங்கச் சங்கிலி திருட்டுப்போனது.

ஸ்ரீவில்லிபுத்தூா்  தன்யா நகா் காளையாா்குறிச்சி தெருவை சோ்ந்தவா் முத்தம்மாள் (76). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை  சென்றுவிட்டு, பின்னா் வீட்டிற்கு பேருந்தில் வந்துள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சா்ச் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவா், ஆட்டோவில் ஏறி மடவாா்வளாகம் ஆா்ச் பகுதியில் இறங்கியுள்ளாா். அப்போது, தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப்போனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி ரெங்கம்மாள் (65). இவா் உறவினரின் இறுதிச் சடங்கிற்கு சத்திரப்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்திற்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு ராஜபாளையத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது, தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.