ஸ்ரீவிலி. அருகே பைக்குகள்மோதல்: இளைஞா் பலி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம், கல்யாணசுந்தர விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் ஜெயராமன் (22). இவா், ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலை ராஜீவ் காந்தி நகா், பருத்தி ஆராய்ச்சி நிலைய குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த கோமேதகன் (22) என்பவா் திடீரென திரும்பிய போது இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமனை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். மேலும் ஜெயராமனின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து வந்த தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தைச் சோ்ந்த கனகராஜ் காயமடைந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.