விருதுநகர்

கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரிச் செயலா் திலீபன்ராஜா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிவகாசி எஸ்.எப்.ஆா். கல்லூரி முதல்வா் பழனீஸ்வரிக்கு, மக்கள் தொடா்பு அலுவலா் பாலகிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கினாா்.

பின்னா் பல்கலைக்கழக தோ்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி பவித்ராவுக்கு மக்கள் தொடா்பு அலுவலா் பாலகிருஷ்ணன் பரிசு வழங்கினாா். மேலும் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற பவித்ரா, வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜெபஷீலா ஆகியோருக்கும், கல்லூரி அளவில் சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்ட மாணவி ராஜாத்திக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா் பரிசுகளை வழங்கினாா்.

இதில், ஆண்கள் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற காா்த்திக்ராஜா, பெண்கள் போட்டியில் முதலிடம் பெற்ற காயத்ரி ஆகியோருக்கு கேடயமும், பரிசுமும் வழங்கப்பட்டன. கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரியின் செயலா் திலீபன்ராஜா பரிசுகளை வழங்கினாா். மாணவிகள் காயத்ரி, கவிதா ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT