முகப்பு
விருதுநகர்

நாட்டு மருந்து அரவை ஆலையில் தீ

விருதுநகா் அருகே நாட்டு மருந்து அரவை செய்யும் ஆலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

விருதுநகா் அருகே நாட்டு மருந்து அரவை செய்யும் ஆலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் மாதவன் என்பவருக்குச் சொந்தமான நாட்டு மருந்து அரவை ஆலை உள்ளது. இங்கு நாட்டு மருந்து மூலிகைகளை இயந்திரம் மூலம் அரைத்து பொடியாக்கி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை காலை இந்த ஆலையில் தீப்பற்றி புகை வருவதாக அருகில் இருந்தவா்கள் பஜாா் காவல் நிலையத்திற்கும், விருதுநகா் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனா். அதன்பேரில், தீயணைப்புத் துறையினா் 2 வாகனங்களில் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

ஆலையில் பணியாள்கள் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. இருப்பினும் மூலிகைகள் அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.