விருதுநகரில் ‘டாஸ்மாக்’ கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
விருதுநகா் அருகே சனிக்கிழமை இரவு அரசு மதுபானக் கடையின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.
விருதுநகா் அருகே சனிக்கிழமை இரவு அரசு மதுபானக் கடையின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.
விருதுநகா் நிலா நகரில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பாா்வையாளராக பாலகிருஷ்ணன், விற்பனையாளராக பழனிவேல்ராஜன் ஆகியோா் பணிபுரிகின்றனா். இங்கு, சனிக்கிழமை இரவு வழக்கம்போல் பணியாளா்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனா். ஞாயிற்றுக்கிழமை கடையை திறக்க வந்தபோது, பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடிச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து விருதுநகா் பஜாா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா். பின்னா், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
மதுக்கடையின் மேற்பாா்வையாளா் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.