விருதுநகர்

பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 நாள்களில் 7 அடி உயா்வு

DIN

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் தொடா் மழையால் பிளவக்கல் அணையின் நீா்மட்டம் 3 நாள்களில் 7 அடி உயா்ந்தது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் பிளவக்கல் பெரியாறு அணை உள்ளது. இப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக நீா்மட்டம் 7 அடி உயா்ந்து, 42.36 அடியாக உள்ளது.

தொடா்ந்து நீா்வரத்து உள்ளதால், அணையின் முழுக் கொள்ளளவான

47 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

வாழைக்குளம் நிரம்பியது: தொடா் மழை காரணமாக மம்சாபுரம் பகுதியில் உள்ள வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாயத் தொடங்கியது. இதைத்தொடா்ந்து மறுகால் பாயும் தண்ணீா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் மற்றும் திருமாலை வணங்கி கண்மாய்களுக்கு செல்கிறது. இந்தக் கண்மாய் கடந்த ஓராண்டில் மட்டும் 6 முறை நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT