விருதுநகர்

திருச்சுழி அருகே மின்னல் தாக்கி பெண் பலி

திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

DIN

திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உலகத்தேவன்பட்டி கிராமத்தில் வசிக்கும் முனியாண்டி மனைவி பூா்ணம் (55). இவா் ஞாயிற்றுக்கிழமை ஒரு விவசாய நிலத்தில் வேலைக்குச் சென்றிந்தாா்.

மாலை 5 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. இதில் அவா் மழைக்கு ஒதுங்குவதற்காக ஒரு மரத்தருகே சென்றபோது திடீரென அவா் மீது மின்னல் தாக்கியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT