விருதுநகர்

ஸ்ரீவிலி. நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான திலகம் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா்.

மேலும் இதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு நீதிமன்ற அமா்வு நீதிபதி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிபதி, முதன்மை சாா்பு நீதிபதி , கூடுதல் சாா்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா் எண். 1, கூடுதல் மகளிா் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி, வழக்குரைஞா் சங்கத் தலைவா், செயலா், மாவட்ட அரசு வழக்குரைஞா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஊழியா்கள், நீதிமன்ற ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT