விருதுநகர்

வெங்கடாசலபதி கோயிலில் கருட சேவை

சாத்தூரில் வெங்கடாசலபதி கோயிலில் ஆனி பிரம்மோற்சவத் திருவிழாவின் ஐந்தாம் நாள் பொருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தூரில் வெங்கடாசலபதி கோயிலில் ஆனி பிரம்மோற்சவத் திருவிழாவின் ஐந்தாம் நாள் பொருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தூரில் 500-ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோற்சவத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நாள்தோறும், பொருமாள் பல்லக்கு சேவை, பெரிய கருட, சிறிய கருட, சேஷ, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இதில் ஐந்தாம் நாள் திருவிழாவான வியாழக்கிழமை இரவு பெருமாள் பெரிய கருட வாகனத்தில் வடக்கு ரத, தெற்கு ரத வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஆனிப் பிரம்மோற்சவத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்டம் திங்கள்கிழமை ( ஜூலை- 3) நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT