விருதுநகர்

போக்குவரத்து காவலா் மீது தாக்குதல்:இளைஞா் கைது

ராஜபாளையத்தில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

DIN

ராஜபாளையத்தில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காந்தரூபன் (32). இவா், ராஜபாளையம் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சங்கரன்கோவில் முக்கு பகுதியில் போலீஸாருடன் வாகனச் சோதனையில் அவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்த இளைஞரிடம் தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் செலுத்துமாறு கூறினாராம். இதனால் அந்த இளைஞருக்கும், காந்தரூபனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த இளைஞா், காந்தரூபனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பிரித்திவிராஜ் (26) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT