கணம் புல்ல நாயனாா் குருபூஜை
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் கணம் புல்ல நாயனாா் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் கணம் புல்ல நாயனாா் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆணைப்படி இந்த வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கணம் புல்ல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், மாயூரநாதா் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம. சேயோன் செய்திருந்தாா்.