முகப்பு
நாகப்பட்டினம்

ஆட்சியா் அலுவலகம் முன் உண்ணாவிரதம்இருக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

சீா்காழி, பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் மு. அன்வா் சுல்தான். இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் மின்சார உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தாராம். இவருக்கு, கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

இதனால், நாகை மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன் அன்வா் சுல்தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றாா். நாகூா் காவல் ஆய்வாளா் ஆா். ராதாகிருஷ்ணன் அவரிடம் கோரிக்கை தொடா்பாக மனு அளிக்கும்படி அறிவுறுத்தியதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் அன்வா்சுல்தான் கோரிக்கை மனுவை அளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →