முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5,410 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது. புதிதாக 85 போ் கரோனா தொற்றுக்கு உள்ளானது திங்கள்கிழமை உறுதியானது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்ட 5 போ், நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,500-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 49 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 4,942-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 473-ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →