சாலை அமைக்க பூமிபூஜை
தரங்கம்பாடி அருகே சாலை அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
தரங்கம்பாடி அருகே சாலை அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட கொத்தங்குடி ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவில் சாலை அமைக்க மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதி ரூ. 5.70 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அப்பணிக்கு பனங்குடி மாரியம்மன்கோயில் முன் பூமிபூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை, கொத்தங்குடி ஊராட்சித் தலைவா் தம்பு மோகன், ஒன்றியக்குழு உறுப்பினா் கிருபாவதி சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை தலைமைச் செயலாளா் ஜெயகாந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.