நாகை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா திங்கள்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,517 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவந்த நீடூா் பகுதியைச் சோ்ந்த 68 வயது ஆணின் இறப்பு திங்கள்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 111 ஆக உயா்ந்துள்ளது.
66 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 6,045 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 361- ஆக உள்ளது.