அடையாளம் தெரியாத ஆண் சடலம்
நாகூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
நாகூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
நாகூா் மேலவாஞ்சூா் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்து கிடந்த நபரின் பெயா், விலாசம் தெரியவில்லை. மீசை வைத்துள்ளாா், நீலம், வெள்ளை, கருப்பு கலந்த கோடு போட்ட அரைக்கை சட்டை அணிந்திருந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.